search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை: கண்ணிவெடியில் சிக்கி மீனவர் பலி
    X

    இலங்கை: கண்ணிவெடியில் சிக்கி மீனவர் பலி

    இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுக்க முயன்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொழும்பு:

    இலங்கையில் தனி ஈழத்துக்காக அரசுப்படைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள் முன்னர் தங்கள் பகுதிக்குள் ரானுவம் நுழைவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர்.

    தற்போது, அவற்றை அகற்றும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுவரும் நிலையில் இதைப்போல் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தோண்டி எடுக்கும் சில மீனவர்கள், அவற்றை மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    அவ்வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பள்ளை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை நேற்று எடுக்க முயன்றபோது திடீரென்று ஒன்று வெடித்துச் சிதறியதால் ஒரு மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இறந்த நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இடம்பெற்றிருந்தவராவார் என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×