என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைமா புயலால் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 16 லட்சம் மக்கள் பாதிப்பு
Byமாலை மலர்23 Oct 2016 12:36 PM GMT (Updated: 23 Oct 2016 12:36 PM GMT)
சீனா தென் பகுதியை தாக்கிய ஹைமா தைபூன் புயாலால் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீஜிங்:
பிலிப்பைன்ஸ் நாட்டை தொடர்ந்து சீனாவின் தென் பகுதியை ஹைமா தைபூன் புயல் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக தாக்கியது. இதில் குவாங்டாங் மாகாணம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் சீனாவை தாக்கிய ஹைமா புயலுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பான எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
2,749 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகின. 517 மில்லியன் டாலர் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிவில் விவகாரங்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பை தொடர்ந்து சீன அரசு துரிதமாக பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் சனிக்கிழமை அன்றே 95.5 சதவீதம் மின்சார பாதிப்பு சீரமைக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டை தொடர்ந்து சீனாவின் தென் பகுதியை ஹைமா தைபூன் புயல் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக தாக்கியது. இதில் குவாங்டாங் மாகாணம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் சீனாவை தாக்கிய ஹைமா புயலுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பான எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
2,749 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகின. 517 மில்லியன் டாலர் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிவில் விவகாரங்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பை தொடர்ந்து சீன அரசு துரிதமாக பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் சனிக்கிழமை அன்றே 95.5 சதவீதம் மின்சார பாதிப்பு சீரமைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X