என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிரவாதிகளை நாங்களே ‘போட்டுத் தள்ளுவோம்’: அமெரிக்கா எச்சரிக்கை
Byமாலை மலர்23 Oct 2016 7:59 AM GMT (Updated: 23 Oct 2016 7:59 AM GMT)
உளவுத்துறையின் அரவணைப்புடன் வாலாட்டிவரும் தீவிரவாதிகள் மீது பாரபட்சம் காட்டாமல் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியாக நின்று அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை தாக்கி அழிப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அரசின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு செல்லும் நிதியை தடுக்கும் துறைக்கான செயலாளர் ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது தொடர்பாக அவர் பேசியதாவது:-
உங்கள் நாட்டில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையில் அந்நாட்டுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தான் அரசுக்கு உள்ளே இருக்கும் சில சக்திகள்.., குறிப்பாக, அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. எல்லா தீவிரவாத குழுக்கள் மீதும் ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன.
அங்கு இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதிலும், அவர்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுப்பதிலும் பாகிஸ்தானோடு தொடர்ந்து ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள அதேவேளையில், அவசியம் ஏற்பட்டால் தனியாக நின்று இந்த தீவிரவாத அமைப்புகளை தடுக்கவும், ஒழிக்கவும் அமெரிக்க அரசு தயங்காது’.
மேற்கண்டவாறு அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அரசின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு செல்லும் நிதியை தடுக்கும் துறைக்கான செயலாளர் ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது தொடர்பாக அவர் பேசியதாவது:-
உங்கள் நாட்டில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையில் அந்நாட்டுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தான் அரசுக்கு உள்ளே இருக்கும் சில சக்திகள்.., குறிப்பாக, அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. எல்லா தீவிரவாத குழுக்கள் மீதும் ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன.
அங்கு இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதிலும், அவர்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுப்பதிலும் பாகிஸ்தானோடு தொடர்ந்து ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள அதேவேளையில், அவசியம் ஏற்பட்டால் தனியாக நின்று இந்த தீவிரவாத அமைப்புகளை தடுக்கவும், ஒழிக்கவும் அமெரிக்க அரசு தயங்காது’.
மேற்கண்டவாறு அவர் எச்சரித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X