என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: வணிக வளாகத்தில் சிலர் காயம்
Byமாலை மலர்26 Sep 2016 2:10 PM GMT (Updated: 26 Sep 2016 2:10 PM GMT)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரில் உள்ள ஒரு வீதியில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த 3 மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தில் சிலர் காயமடைந்ததாக அமெரிக்க போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்குள் இருந்த சுமார் 7 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர் போலீசாரால் சுடப்பட்டான் என்று டெக்சாஸ் அதிகாரிகள் கூறினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து வணிக வளாக பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரில் உள்ள ஒரு வீதியில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த 3 மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தில் சிலர் காயமடைந்ததாக அமெரிக்க போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்குள் இருந்த சுமார் 7 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர் போலீசாரால் சுடப்பட்டான் என்று டெக்சாஸ் அதிகாரிகள் கூறினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து வணிக வளாக பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X