என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்
Byமாலை மலர்24 Sep 2016 12:39 AM GMT (Updated: 24 Sep 2016 12:39 AM GMT)
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சியோல்:
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனை, இதுவரை நடத்திய அனைத்து சோதனைகளிலும் சக்திமிக்கது என கூறப்படுகிறது.
இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், இதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி, எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அதிர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தென்கொரியாவை பொறுத்தமட்டில் அணு ஆயுதங்கள் எதுவும் அந்த நாட்டிடம் கிடையாது. பாதுகாப்புக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கிறது.
வட கொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை இரண்டு முறை தென்கொரியாவுக்கு அனுப்பி பறக்க வைத்து, அந்த நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தது. இது வடகொரியாவை மிரட்டும் நடவடிக்கைதான். ஆனாலும் வடகொரியா எதற்கும் அடிபணிவதாக இல்லை.
இந்த நிலையில் தென்கொரிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது, “வடகொரியாவின் அணு ஆயுதங்களால் தென் கொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னை கொல்வதற்கு சிறப்பு படை பிரிவு வீரர்கள் (அதிரடிப்படை வீரர்கள்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு தென் கொரிய ராணுவ மந்திரி ஹான் மின் கூ பதில் அளித்தார்.
அப்போது அவர், “ஆமாம். நம்மிடம் அதற்கான திட்டம் உள்ளது. அந்த நாட்டின் தலைவரை மட்டுமின்றி, எதிரிகளின் இலக்குகளை வீழ்த்துவதற்கு ஏவுகணை வல்லமையை பயன்படுத்துவதற்கான திட்டம் நம்மிடம் உள்ளது” என கூறினார்.
இது கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனை, இதுவரை நடத்திய அனைத்து சோதனைகளிலும் சக்திமிக்கது என கூறப்படுகிறது.
இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், இதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி, எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அதிர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தென்கொரியாவை பொறுத்தமட்டில் அணு ஆயுதங்கள் எதுவும் அந்த நாட்டிடம் கிடையாது. பாதுகாப்புக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கிறது.
வட கொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை இரண்டு முறை தென்கொரியாவுக்கு அனுப்பி பறக்க வைத்து, அந்த நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தது. இது வடகொரியாவை மிரட்டும் நடவடிக்கைதான். ஆனாலும் வடகொரியா எதற்கும் அடிபணிவதாக இல்லை.
இந்த நிலையில் தென்கொரிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது, “வடகொரியாவின் அணு ஆயுதங்களால் தென் கொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னை கொல்வதற்கு சிறப்பு படை பிரிவு வீரர்கள் (அதிரடிப்படை வீரர்கள்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு தென் கொரிய ராணுவ மந்திரி ஹான் மின் கூ பதில் அளித்தார்.
அப்போது அவர், “ஆமாம். நம்மிடம் அதற்கான திட்டம் உள்ளது. அந்த நாட்டின் தலைவரை மட்டுமின்றி, எதிரிகளின் இலக்குகளை வீழ்த்துவதற்கு ஏவுகணை வல்லமையை பயன்படுத்துவதற்கான திட்டம் நம்மிடம் உள்ளது” என கூறினார்.
இது கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X