என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை
Byமாலை மலர்22 Sep 2016 5:08 AM GMT (Updated: 22 Sep 2016 5:08 AM GMT)
தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டியுள்ளார் சீன தந்தை.
சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் யாயுன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கடந்த 19-ந்தேதி அந்த குழந்தைக்கு 1 மாதம் முடிவடைகிறது.
பணக்கார தந்தையான இவர், தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாட வேண்டும். மேலும், தனது மகள் பெரியவளாகும்போது தன்னுடடைய பிறந்த நாளை தந்தை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியுள்ளார் என்பதை இந்த படங்களைப் பார்த்து பூரிப்பு அடைய வேண்டும் என்று நினைத்தார்.
இதனால் பிறந்த நாளிற்கு அழைத்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ட்ரோன் (ஆளில்லா விமானம்) வாங்கி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி பிறந்த நாளிற்கு வந்த அனைவருக்கும் ட்ரோன் வாங்கி கொடுத்தார்.
அவர்கள் குழந்தைகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, டிட்ரோனை பறக்கவிட்டனர். இதனால் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட இடத்திற்கு மேல் பட்டாம்பூச்சி பறப்பதுபோல், ட்ரோன்களாக பறந்து அமர்க்களப்படுத்தின.
இதுகுறித்து ட்விட்டரில் சிலர் கருத்துக்கள் கூறினார்கள். அப்போது, சீன பணக்காரர் ஒருவர் தனது நாய்க்கு 8 ஐ-போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது ஒருவர் தனது மகளின் முதல் மாத பிறந்த நாளைக்காக ட்ரோன்களாக பறக்க விடுகிறார். அவர்களது அருகில் நடுத்தர வர்க்க மக்களும் வாழ்ந்து வரும்போது இது தேவைதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்த பிறந்த நாள் விழாவில் பறந்த ஒரு ட்ரோனின் விலை சுமார் 1800 டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.
பணக்கார தந்தையான இவர், தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாட வேண்டும். மேலும், தனது மகள் பெரியவளாகும்போது தன்னுடடைய பிறந்த நாளை தந்தை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியுள்ளார் என்பதை இந்த படங்களைப் பார்த்து பூரிப்பு அடைய வேண்டும் என்று நினைத்தார்.
இதனால் பிறந்த நாளிற்கு அழைத்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ட்ரோன் (ஆளில்லா விமானம்) வாங்கி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி பிறந்த நாளிற்கு வந்த அனைவருக்கும் ட்ரோன் வாங்கி கொடுத்தார்.
அவர்கள் குழந்தைகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, டிட்ரோனை பறக்கவிட்டனர். இதனால் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட இடத்திற்கு மேல் பட்டாம்பூச்சி பறப்பதுபோல், ட்ரோன்களாக பறந்து அமர்க்களப்படுத்தின.
இதுகுறித்து ட்விட்டரில் சிலர் கருத்துக்கள் கூறினார்கள். அப்போது, சீன பணக்காரர் ஒருவர் தனது நாய்க்கு 8 ஐ-போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது ஒருவர் தனது மகளின் முதல் மாத பிறந்த நாளைக்காக ட்ரோன்களாக பறக்க விடுகிறார். அவர்களது அருகில் நடுத்தர வர்க்க மக்களும் வாழ்ந்து வரும்போது இது தேவைதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்த பிறந்த நாள் விழாவில் பறந்த ஒரு ட்ரோனின் விலை சுமார் 1800 டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X