என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது
Byமாலை மலர்20 March 2019 11:00 AM GMT (Updated: 20 March 2019 11:00 AM GMT)
தனியார் பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 26). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நெப்போலியன் தன்னிடம் பயிற்சிக்கு வரும் முதலியார் பேட்டையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் புதுவை குழந்தைகள் நல குழுவிடம் புகார் செய்தனர். இதன் மீது குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.
அப்போது மாணவிக்கு நெப்போலியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலகுழு தலைவர் ராஜேந்திரன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் செய்தார்.
புகாரை ஏற்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா முதலியார்பேட்டை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் நெப்போலியனை கைது செய்தனர். #tamilnews
புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 26). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நெப்போலியன் தன்னிடம் பயிற்சிக்கு வரும் முதலியார் பேட்டையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் புதுவை குழந்தைகள் நல குழுவிடம் புகார் செய்தனர். இதன் மீது குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.
அப்போது மாணவிக்கு நெப்போலியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலகுழு தலைவர் ராஜேந்திரன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் செய்தார்.
புகாரை ஏற்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா முதலியார்பேட்டை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் நெப்போலியனை கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X