search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை
    X

    காஞ்சீபுரத்தில் அண்ணா சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

    அண்ணாவின் 110 வது பிறந்த நாளினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ArignarAnna
    காஞ்சீபுரம்:

    அண்ணாவின் 110 வது பிறந்த நாளினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர்கள் க,சுந்தர் எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ மற்றும் எழிலரசன் எம்.எல்.ஏ. வி.எஸ்.ராம கிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், தசரதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையிலும், தேமுதிக சார்பில் நகரச் செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ArignarAnna
    Next Story
    ×