search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமெண்டு பலகை- 3 மாணவர்கள் கைது
    X

    வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமெண்டு பலகை- 3 மாணவர்கள் கைது

    சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில், ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கடந்த 30-ந்தேதி சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 4-ந்தேதி இரவும் அதே பகுதியில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை இருந்தது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேளச்சேரி-பெருங்குடி தண்டவாளத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்ததாக பெருங்குடி, குன்றத்தூரை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் வேளச்சேரியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். விசாரணையில் நண்பரின் பிறந்தநாள் செலவுக்காக சிமெண்டு பலகையை உடைத்து அதில் இருந்த கம்பிகளை விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    உடைத்த சிமெண்டு பலகையை அவர்கள் விளையாட்டாக தண்டவாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×