என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு
Byமாலை மலர்29 Aug 2018 7:47 AM GMT (Updated: 29 Aug 2018 7:47 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
கர்நாடக மாநிலத்தில பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கர்நாடக- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் மழைக்குறைவு காரணமாக தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த அளவே வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்திக்கல் பாறையில் இருந்து பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் அந்த பகுதிகளில் பரிசல் இயக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.
வழக்கமான பாதையான பரிசல் நிலையத்தில் இருந்து பரிசல்களை இயக்க இன்று அல்லது நாளை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெயினருவில் தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி இன்னும் நடைபெறாததால் அங்கு தொடர்ந்து 52-வது நாளாக இன்றும் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மெயினருவியை தவிர மற்ற பகுதிகளான முதலை பண்ணை, காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிள் எண்ணை மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery
கர்நாடக மாநிலத்தில பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கர்நாடக- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் மழைக்குறைவு காரணமாக தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த அளவே வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்திக்கல் பாறையில் இருந்து பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் அந்த பகுதிகளில் பரிசல் இயக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.
வழக்கமான பாதையான பரிசல் நிலையத்தில் இருந்து பரிசல்களை இயக்க இன்று அல்லது நாளை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெயினருவில் தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி இன்னும் நடைபெறாததால் அங்கு தொடர்ந்து 52-வது நாளாக இன்றும் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மெயினருவியை தவிர மற்ற பகுதிகளான முதலை பண்ணை, காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிள் எண்ணை மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X