search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
    X
    நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

    தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

    தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது 27). விவசாயியான இவர் பசுமாடு வளர்ந்து வருகிறார். இவரது பசு மாடு ஏற்கனவே 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை பசுமாடு ஒரு கன்றை ஈன்றது. அப்போது கன்றுக்கு நெற்றியில் கண் உள்ளது. மேலும் 4 துவாரத்துடன் 2 மூக்குகள் இருந்தது.

    நெற்றிக்கண்ணுடன், 2 மூக்குடனும் பிறந்த கன்றுக்குட்டி நலமாக உள்ளது. வழக்கம்போல் மற்ற கன்றுகளை போல துள்ளி குதித்து விளையாடுகிறது.

    நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

    Next Story
    ×