என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினகரன் தலைமையில் கோட்டையை பிடிப்போம்: முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
Byமாலை மலர்19 Feb 2018 7:32 AM GMT (Updated: 19 Feb 2018 7:32 AM GMT)
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் டி.டி.வி. அணி தான் வெற்றி பெற்று அவர் தலைமையில் கோட்டையை பிடிப்போம் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சென்னை:
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் அணி புதிய நிர்வாகிகள் நியமனம், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி பகுதி கழகங்கள் சார்பில் நடந்தது. விருகம்பாக்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பகுதி செயலாளர் கே.எஸ்.முரளி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் மக்கள் தினகரன் பக்கம் தான் உள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.
காந்த சக்தியால் மக்களை ஈர்க்க கூடியவர் தினகரன். அவரது செயல்பாடு, அணுகு முறை சொல், செயல், நிர்வாகத்திறன், அறிவாற்றல், எழுத்தாற்றல் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 90 சதவீத மக்கள், தொண்டர்கள் தினகரன் பக்கம் தான் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு விருப்பமில்லை. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு வரும் போது அவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
உள்ளாட்சி தேர்தல்,சட்ட மன்றதேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் டி.டி.வி. அணி தான் வெற்றி பெறும். விரைவில் தினகரன் தலைமையில் கோட்டையை பிடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் அணி புதிய நிர்வாகிகள் நியமனம், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி பகுதி கழகங்கள் சார்பில் நடந்தது. விருகம்பாக்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பகுதி செயலாளர் கே.எஸ்.முரளி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் மக்கள் தினகரன் பக்கம் தான் உள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.
காந்த சக்தியால் மக்களை ஈர்க்க கூடியவர் தினகரன். அவரது செயல்பாடு, அணுகு முறை சொல், செயல், நிர்வாகத்திறன், அறிவாற்றல், எழுத்தாற்றல் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 90 சதவீத மக்கள், தொண்டர்கள் தினகரன் பக்கம் தான் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு விருப்பமில்லை. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு வரும் போது அவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
உள்ளாட்சி தேர்தல்,சட்ட மன்றதேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் டி.டி.வி. அணி தான் வெற்றி பெறும். விரைவில் தினகரன் தலைமையில் கோட்டையை பிடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X