என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்கிப்பட்டி அருகே மின் கம்பத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி
பூதலூர்:
தஞ்சை வடக்கு பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 27) இவருக்கும், திருச்சியை சேர்ந்த பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. இந்த நிலையில் திருச்சியில் இருக்கும் மனைவியை பார்க்க மோகன் ராஜ் விரும்பினார். அவர் இன்று காரில் திருச்சிக்கு புறப்பட்டார். அவரே காரை ஓட்டினார். அந்த கார் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி பகுதியில் சென்ற போது எதிர் பாராதவிதமாக டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி கார் ரோட்டோர மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் மோகன்ராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்