என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை சினிமா தியேட்டரில் ‘பேய்’ படம் பார்த்த தொழிலாளி மரணம்
Byமாலை மலர்25 April 2017 11:09 AM GMT (Updated: 25 April 2017 11:09 AM GMT)
நெல்லை சினிமா தியேட்டரில் ‘பேய்’ படம் பார்த்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் கம்புகடை தெருவை சேர்ந்தவர் காமில் (வயது47), கூலி தொழிலாளி. நேற்று இரவு இவர் நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பேய் மற்றும் ஆவி சம்பந்தமாக திரையிடப்பட்டுள்ள சினிமா படத்தை சென்று பார்த்தார்.
படம் முடிந்ததும் தியேட்டர் ஊழியர்கள் இருக்கைகளை சுத்தம் செய்தனர். அப்போது காமில் இருக்கையில் அமர்ந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக தியேட்டர் ஊழியர்கள் நிர்வாகத்திற்கும், அவசர ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது காமில் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் வைத்து இருந்த செல்போன் மற்றும் போன் டைரி மூலம் அவரது உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
காமில் பேய் படம் பார்த்த போது அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் கம்புகடை தெருவை சேர்ந்தவர் காமில் (வயது47), கூலி தொழிலாளி. நேற்று இரவு இவர் நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பேய் மற்றும் ஆவி சம்பந்தமாக திரையிடப்பட்டுள்ள சினிமா படத்தை சென்று பார்த்தார்.
படம் முடிந்ததும் தியேட்டர் ஊழியர்கள் இருக்கைகளை சுத்தம் செய்தனர். அப்போது காமில் இருக்கையில் அமர்ந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக தியேட்டர் ஊழியர்கள் நிர்வாகத்திற்கும், அவசர ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது காமில் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் வைத்து இருந்த செல்போன் மற்றும் போன் டைரி மூலம் அவரது உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
காமில் பேய் படம் பார்த்த போது அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X