என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து 40 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை
Byமாலை மலர்12 April 2017 11:00 AM GMT (Updated: 12 April 2017 11:00 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானிசாகர் அணை தற்போது கடும் வறட்சி காரணமாகவும் தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததாலும் வறண்டு போய் கிடக்கிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது 105 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. ஊட்டி மலை பகுதியில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 155 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கோடைமழை பெய்தால் அணைக்கு மேலும் தண்ணீர் வரும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானிசாகர் அணை தற்போது கடும் வறட்சி காரணமாகவும் தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததாலும் வறண்டு போய் கிடக்கிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது 105 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. ஊட்டி மலை பகுதியில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 155 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கோடைமழை பெய்தால் அணைக்கு மேலும் தண்ணீர் வரும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X