என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மீஞ்சூரில் தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: 5 பேருக்கு வலைவீச்சு
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
நேற்று இரவு அவர் நந்தியம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அப்போது 3 பேர் கும்பல் ரவியை சுற்றிவளைத்து வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் ரவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிலத்தை விற்பது தொடர்பாக ரவிக்கும் அவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் கொலை நடந்து இருப்பதாக போலீ சார் தெரிவித்தனர். இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் உள்பட 5 பேரை தேடிவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்