என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது
Byமாலை மலர்24 March 2017 2:33 PM GMT (Updated: 24 March 2017 2:33 PM GMT)
திருச்சி அருகே வீட்டில் இருந்த பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை கைது செய்தனர்.
புலிவலம்:
திருச்சி மாவட்டம், புலி வலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், டிரைவர். இவரது மனைவி காமாட்சி (வயது47). இவர்களது மகள் சுபா. கர்ப்பிணியான இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று காமாட்சி தனது வீட்டின் பின்புறத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் (35) என்பவர் காமாட்சியை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்குள் வைத்து காமாட்சியை சரமாரி தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது வெளியே சென்றிருந்த சுபா, வீட்டிற்கு வரவே நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், அருணை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அருண், சுபாவின் வயிற்றில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு துறைமயூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், புலி வலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், டிரைவர். இவரது மனைவி காமாட்சி (வயது47). இவர்களது மகள் சுபா. கர்ப்பிணியான இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று காமாட்சி தனது வீட்டின் பின்புறத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் (35) என்பவர் காமாட்சியை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்குள் வைத்து காமாட்சியை சரமாரி தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது வெளியே சென்றிருந்த சுபா, வீட்டிற்கு வரவே நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், அருணை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அருண், சுபாவின் வயிற்றில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு துறைமயூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X