என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈஷா மையத்திற்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
Byமாலை மலர்23 Feb 2017 11:40 AM GMT (Updated: 23 Feb 2017 11:40 AM GMT)
ஈஷா மையத்திற்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
கோவை:
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை வெள்ளிங்கரி மலைச்சாரலில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது. யோகா கலையை பரப்புதல், கல்வி, மருத்துவம், இயற்கை விவசாயம், கிராமிய துறைகளில் அரிய பல சேவைகளை செய்து வருகிறது. இங்கு மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது போல இந்த ஆண்டும் ஆன்மீகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், ஈஷா மையத்திற்கு எதிராக சில இயக்கங்கள் அவதூறு பிரசாரம் செய்து சிவபக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே ஈஷா மீது தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி குறித்து வெறுப்புணர்வு பிரசாரம் செய்யும் கம்யூனிஸ்டு தலைவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஜோதிடர் அணி மாநில தலைவர் பிரசன்ன சுவாமிகள், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, பொன்னுசாமி, காலனி பிரபு உள்பட பலர் உடன் சென்றனர்.
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை வெள்ளிங்கரி மலைச்சாரலில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது. யோகா கலையை பரப்புதல், கல்வி, மருத்துவம், இயற்கை விவசாயம், கிராமிய துறைகளில் அரிய பல சேவைகளை செய்து வருகிறது. இங்கு மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது போல இந்த ஆண்டும் ஆன்மீகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், ஈஷா மையத்திற்கு எதிராக சில இயக்கங்கள் அவதூறு பிரசாரம் செய்து சிவபக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே ஈஷா மீது தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி குறித்து வெறுப்புணர்வு பிரசாரம் செய்யும் கம்யூனிஸ்டு தலைவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஜோதிடர் அணி மாநில தலைவர் பிரசன்ன சுவாமிகள், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, பொன்னுசாமி, காலனி பிரபு உள்பட பலர் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X