என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை
Byமாலை மலர்15 Feb 2017 10:02 AM GMT (Updated: 15 Feb 2017 10:02 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆங்காங்கே மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆங்காங்கே மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 23 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், அம்பை 3 மில்லி மீட்டர், தென்காசி 3.2 மில்லி மீட்டர், நாங்குநேரி 2 மில்லி மீட்டர், ராமநதி 2 மில்லி மீட்டர், நெல்லை 1.2 மில்லி மீட்டர், சேரன்மகாதேவி 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 744.68 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 104.75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.30 அடியாக இருந்தது. இன்று 1½ அடி உயர்ந்து 51.75 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 49.38 அடி யாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 77.03 அடியாக உள்ளது.
இன்றும் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆங்காங்கே மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 23 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், அம்பை 3 மில்லி மீட்டர், தென்காசி 3.2 மில்லி மீட்டர், நாங்குநேரி 2 மில்லி மீட்டர், ராமநதி 2 மில்லி மீட்டர், நெல்லை 1.2 மில்லி மீட்டர், சேரன்மகாதேவி 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 744.68 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 104.75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.30 அடியாக இருந்தது. இன்று 1½ அடி உயர்ந்து 51.75 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 49.38 அடி யாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 77.03 அடியாக உள்ளது.
இன்றும் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X