என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே வேன் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்15 Feb 2017 6:34 AM GMT (Updated: 15 Feb 2017 6:34 AM GMT)
செங்கம் அருகே வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:
செங்கம் அருகே உள்ள நயம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 25). இவர்களது நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது.
அந்த கரும்புகளை வெட்டி பண்ணாரி கரும்பு அரவை மில்லுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. அதன்படி நேற்று இரவு கரும்புகள் டிராக்டரில் ஏற்றப்பட்டது.
பின்னர் நிலத்தில் இருந்து டிராக்டர் புறப்பட்டது. டிராக் டருக்கு முன்பு பைக்கில் மனோஜ்குமாரும், அவரது நண்பர் அருண்குமாரும் சென்றனர். அவர்கள் பைக்கை ஆங்காங்கே நிறுத்தி கரும்புகள் மின் கம்பி உள்ளிட்டவை மீது உரசாமல் இருக்க ஏற்பாடுகளை செய்த படி சென்றனர். அதேபோல புதுப்பாளையம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோதும் பைக்கை நிறுத்திவிட்டு டிராக் டர் தடங்கல் இல்லாமல் செல்ல ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் மனோஜ்குமார், அருண்குமார் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் கிடைத்ததும் புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 வாலிபர் களின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் அருகே உள்ள நயம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 25). இவர்களது நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது.
அந்த கரும்புகளை வெட்டி பண்ணாரி கரும்பு அரவை மில்லுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. அதன்படி நேற்று இரவு கரும்புகள் டிராக்டரில் ஏற்றப்பட்டது.
பின்னர் நிலத்தில் இருந்து டிராக்டர் புறப்பட்டது. டிராக் டருக்கு முன்பு பைக்கில் மனோஜ்குமாரும், அவரது நண்பர் அருண்குமாரும் சென்றனர். அவர்கள் பைக்கை ஆங்காங்கே நிறுத்தி கரும்புகள் மின் கம்பி உள்ளிட்டவை மீது உரசாமல் இருக்க ஏற்பாடுகளை செய்த படி சென்றனர். அதேபோல புதுப்பாளையம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோதும் பைக்கை நிறுத்திவிட்டு டிராக் டர் தடங்கல் இல்லாமல் செல்ல ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் மனோஜ்குமார், அருண்குமார் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் கிடைத்ததும் புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 வாலிபர் களின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X