என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகமலை புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு
நாகமலை புதுக்கோட்டை:
சிவகங்கை ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பேரரசி (வயது 31). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி இருந்தார்.
இவரது சகோதரி வீடு மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் உள்ளது. அங்கு செல்வதற்காக நேற்று இரவு பேரரசி இரு சக்கர வாகனத்தில் வடுகபட்டி சொக்கிகுளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சி பகுதியை கடந்து சென்றபோது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரரசியை கீழே தள்ளி நிலைத்தடுமாற செய்தனர்.
பின்னர், அவரை தாக்கி கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டுவேகமாக சென்று விட்டனர்.
முகமூடி கொள்ளையர்களிடம் போராடியதில் அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. கொள்ளையர்கள் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என தெரிகிறது.
பேரரசி கொடுத்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்