என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் போராட்டத்தை கைவிட்டு மாணவ - மாணவிகள் கலைந்து சென்றனர்
Byமாலை மலர்23 Jan 2017 6:46 AM GMT (Updated: 23 Jan 2017 6:46 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் போலீசாரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விழுப்புரம்:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே நகராட்சி திடலில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது.
போராட்டத்தில் விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணியளவில் போராட்ட பந்தலுக்கு விழுப்புரம் தாலுகா போலீசார் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். எனவே நீங்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவ-மாணவிகள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே நகராட்சி திடலில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது.
போராட்டத்தில் விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணியளவில் போராட்ட பந்தலுக்கு விழுப்புரம் தாலுகா போலீசார் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். எனவே நீங்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவ-மாணவிகள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X