என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செம்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
Byமாலை மலர்9 Dec 2016 5:07 AM GMT (Updated: 9 Dec 2016 5:07 AM GMT)
திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை அய்யப்ப பக்தர்கள் வந்த கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திண்டுக்கல்:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரெய்காட்பள்ளியை சேர்ந்த 5 பேர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர். சபரிமலை செல்வதற்காக ஊரிலிருந்து காரில் புறப்பட்டனர். இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, போடிகாமன்வாடி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக கார் மீது மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் மோகன்(வயது30), நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். வினய்(29), நாராயணசாமி(29), அமர்நாத்ரெட்டி(25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரெய்காட்பள்ளியை சேர்ந்த 5 பேர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர். சபரிமலை செல்வதற்காக ஊரிலிருந்து காரில் புறப்பட்டனர். இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, போடிகாமன்வாடி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக கார் மீது மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் மோகன்(வயது30), நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். வினய்(29), நாராயணசாமி(29), அமர்நாத்ரெட்டி(25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X