என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டும் தேனி போலீஸ்காரர்
Byமாலை மலர்9 Dec 2016 4:42 AM GMT (Updated: 9 Dec 2016 4:42 AM GMT)
தேனியை சேர்ந்த போலீஸ்காரர் வேலையை ராஜினாமா செய்து விட்டு தான் கட்டும் கோவிலில் ஜெயலலிதா உருவ சிலையை வைத்து வழிபாடு நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது45) ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டபோது விடுதலை செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலம் பெற வேண்டி தேனி விநாயகர் கோவிலில் போலீஸ் உடையில் மொட்டை போட் டார். வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.
மருத்துவ விடுப்பில் காசிக்கு சென்று ஜெயலலிதாவுக்காக வழிபாடு செய்தார். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மிகுந்த வேதனையடைந்தார். இதனால் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்காக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு சென்று எஸ்.பியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் இறந்து விட்டதால் என்னால் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை. இதனால் எனது பணியில் இருந்து விலகி விட்டேன்.
தற்போது குச்சனூரில் காசிஅன்னபூரணி கோவில் கட்டி வருகிறேன். அந்த கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளேன். அங்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் பொது சேவையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது45) ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டபோது விடுதலை செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலம் பெற வேண்டி தேனி விநாயகர் கோவிலில் போலீஸ் உடையில் மொட்டை போட் டார். வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.
மருத்துவ விடுப்பில் காசிக்கு சென்று ஜெயலலிதாவுக்காக வழிபாடு செய்தார். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மிகுந்த வேதனையடைந்தார். இதனால் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்காக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு சென்று எஸ்.பியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் இறந்து விட்டதால் என்னால் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை. இதனால் எனது பணியில் இருந்து விலகி விட்டேன்.
தற்போது குச்சனூரில் காசிஅன்னபூரணி கோவில் கட்டி வருகிறேன். அந்த கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளேன். அங்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் பொது சேவையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X