என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்
Byமாலை மலர்3 Dec 2016 10:19 AM GMT (Updated: 3 Dec 2016 10:19 AM GMT)
உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
கோவை:
காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை நீலாம்பூரில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன், தங்க பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
2 நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் உடல் நலன் தேறினார். இதையடுத்து அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை நீலாம்பூரில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன், தங்க பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
2 நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் உடல் நலன் தேறினார். இதையடுத்து அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X