என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு
Byமாலை மலர்2 Dec 2016 4:45 AM GMT (Updated: 2 Dec 2016 4:45 AM GMT)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுதானதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 5-வது யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
அனல்மின் நிலைய 2-வது யூனிட்டில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 5-வது யூனிட்டில் விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு யூனிட்டுகளிலும் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, ‘30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 5-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்’ என்றனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
அனல்மின் நிலைய 2-வது யூனிட்டில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 5-வது யூனிட்டில் விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு யூனிட்டுகளிலும் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, ‘30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 5-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X