என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது: நீர்மட்டம் 81.47 அடியாக குறைந்தது
Byமாலை மலர்28 Sep 2016 5:31 AM GMT (Updated: 28 Sep 2016 5:31 AM GMT)
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.
கடந்த 24-ந்தேதி அன்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,861 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று காலையில் விநாடிக்கு 796 கன அடியாக சரிந்தது. மேலும், நீர்வரத்து சரிந்து இன்று காலை 8 மணி அளவில் விநாடிக்கு 692 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 20-ந்தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடும்போது அணையின் நீர்மட்டம் 87.98 அடியாக இருந்தது.
தற்போது, நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டதால், நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி வீதம் குறைந்து வருகிறது. நேற்று காலையில், நீர்மட்டம் 82.44 அடியாக இருந்தது. இன்று காலையில் 81.47 அடியாக குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.
கடந்த 24-ந்தேதி அன்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,861 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று காலையில் விநாடிக்கு 796 கன அடியாக சரிந்தது. மேலும், நீர்வரத்து சரிந்து இன்று காலை 8 மணி அளவில் விநாடிக்கு 692 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 20-ந்தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடும்போது அணையின் நீர்மட்டம் 87.98 அடியாக இருந்தது.
தற்போது, நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டதால், நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி வீதம் குறைந்து வருகிறது. நேற்று காலையில், நீர்மட்டம் 82.44 அடியாக இருந்தது. இன்று காலையில் 81.47 அடியாக குறைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X