என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் விபத்தில் பலி
Byமாலை மலர்15 May 2019 7:12 AM GMT (Updated: 15 May 2019 7:12 AM GMT)
ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற பாலகிருஷ்ணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
போரூர்:
அமைந்தகரை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). நீச்சல் வீரர்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றனர் ஆவார். அமெரிக்காவில் தங்கி இருந்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
நேற்று இரவு அவர் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியைச் பாலகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைந்தகரை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). நீச்சல் வீரர்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றனர் ஆவார். அமெரிக்காவில் தங்கி இருந்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
நேற்று இரவு அவர் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியைச் பாலகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X