என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்
Byமாலை மலர்24 April 2019 2:25 PM GMT (Updated: 24 April 2019 2:25 PM GMT)
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019
பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தேறுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்தியா (3-2) மற்றும் பாகிஸ்தான் (5-0) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.
இதனால் ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என அந்த அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வெளிநாட்டு மண்ணில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மிகமிக முக்கியம். இது எங்களுக்கு தேவைப்பட்டது. இதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.
இது எங்களுக்கு நல்ல நேரம். ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டும்.
உலகக்கோப்பைக்கான எங்கள் அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இணைந்தது மிகப்பெரிய பூஸ்ட். கடந்த சில மாதங்களாக வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். உலகக்கோப்பைக்கான காம்பினேசன் அணியாக இருப்போம்’’ என்றார்.
ஆனால் உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்தியா (3-2) மற்றும் பாகிஸ்தான் (5-0) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.
இதனால் ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என அந்த அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வெளிநாட்டு மண்ணில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மிகமிக முக்கியம். இது எங்களுக்கு தேவைப்பட்டது. இதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.
இது எங்களுக்கு நல்ல நேரம். ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டும்.
உலகக்கோப்பைக்கான எங்கள் அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இணைந்தது மிகப்பெரிய பூஸ்ட். கடந்த சில மாதங்களாக வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். உலகக்கோப்பைக்கான காம்பினேசன் அணியாக இருப்போம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X