search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியா ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் வீரரிடம் வீழ்ந்தார் ஸ்ரீகாந்த் கிதாம்பி
    X

    மலேசியா ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் வீரரிடம் வீழ்ந்தார் ஸ்ரீகாந்த் கிதாம்பி

    மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி நம்பர் ஒன் வீரரிடம் தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார்.
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.

    8 முறை தொடர்ந்து கென்டோவிடம் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த் இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அந்த செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 9-21 என எளிதாக இழந்து தோல்வியடைந்தார்.

    இந்த தோல்வியின் மூலம் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக 9-வது முறை கென்டோவிடம் தோல்வியடைந்துள்ளார்.
    Next Story
    ×