என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் முறையாக மிகவும் சிறப்பான அணியுடன் செல்லும் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு: அலஸ்டைர் குக்
Byமாலை மலர்3 April 2019 11:56 AM GMT (Updated: 3 April 2019 11:56 AM GMT)
முதல் முறையாக மிகவும் திருப்தியான அணியுடன் செல்லும் இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என குக் தெரிவித்துள்ளார். #IPL2019
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. நியூசிலாந்து அணி முதன்முதலாக தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்து, சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து இதுபோன்ற திருப்தியான வீரர்களை கொண்ட அணியுடன் முதல்முறையாக உலகக்கோப்பைக்கு செல்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சிறப்பாக தெரிகிறது. அந்த அணியின் ஒவ்வொரு துறையும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்து, சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து இதுபோன்ற திருப்தியான வீரர்களை கொண்ட அணியுடன் முதல்முறையாக உலகக்கோப்பைக்கு செல்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சிறப்பாக தெரிகிறது. அந்த அணியின் ஒவ்வொரு துறையும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X