search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பையில் டோனியின் அனுபவத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: சுரேஷ் ரெய்னா
    X

    உலகக்கோப்பையில் டோனியின் அனுபவத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: சுரேஷ் ரெய்னா

    உலகக்கோப்பையில் அனுபவமிக்க டோனியை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். #MSDhoni
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று இந்தியா எனக் கருதப்படுகிறது. ஆனால், 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் டோனியின் அனுபவத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இடது கை பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் டோனி கணிசமான ரன்கள் அடித்துள்ளார். அதோடு இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறார். குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு டோனி அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது.

    டோனி அதிக அளவிலான ஏற்றம் இறக்கங்களை கண்டுள்ளார். பல உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கும்போது ஏன் இந்திய அணியுடன் உலகக்கோப்பை தொடருக்க அவர் செல்லக்கூடாது.

    டோனி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகிறார். இதனால் என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் டோனி நான்காவது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×