search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தை பிறந்தது- ரோகித்சர்மா தந்தை ஆனார்
    X

    பெண் குழந்தை பிறந்தது- ரோகித்சர்மா தந்தை ஆனார்

    மும்பை ஆஸ்பத்திரியில் ரோகித்சர்மா- ரித்திகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தந்தையான மகிழ்ச்சியை கேட்ட ரோகித்சர்மா உற்சாகத்தில் மிதந்தார். #rohitsharma #rohitsharmaritika

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித்சர்மா தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார். அவரது மனைவி ரித்திகா கர்பமாக இருந்தார். நேற்று அவருக்கு மும்பையில் பெண் குழந்தை பிறந்தது. தந்தையான மகிழ்ச்சியை கேட்ட ரோகித்சர்மா உற்சாகத்தில் மிதந்தார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


    ரோகித்சர்மா- ரித்திகா தம்பதிக்கு இது முதல் குழந்தை ஆகும். மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் ரோகித்சர்மா இந்தியாவுக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. #rohitsharma #rohitsharmaritika

    Next Story
    ×