search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பொறுமை முக்கியம் - ரஹானே
    X

    இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பொறுமை முக்கியம் - ரஹானே

    இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும் என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ‘இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், பந்தை அடிக்காமல் வெளியே விடும் யுக்தியை நீண்ட நேரம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. தற்போது 1-3 என்ற கணக்கில் பின்தங்கி நிற்கிறோம். தொடரை உயர்ந்த நிலையில் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 3-2 என்ற கணக்கில் முடித்தால் உண்மையிலேயே அது சிறப்பாக இருக்கும்’ என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறினார். #Rahane

    Next Story
    ×