search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம்- நாசர் ஹுசைன்
    X

    இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம்- நாசர் ஹுசைன்

    2016-ல் இந்தியாவிடம் 0-4 எனத் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதன்பின் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றியடைந்து 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.

    தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.



    3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை நடக்கியது. பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவை 2016 தோல்விக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் லார்ட்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட்டமின்றி தோல்வியடைந்தனர். இது பெரியவர்களுக்கும், சிறவர்களுக்கும் இடையிலான போட்டி போன்று இருந்தது என்றும் சாடியுள்ளார்.
    Next Story
    ×