search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் - ஷமி தாக்குதலால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாற்றம்
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் - ஷமி தாக்குதலால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாற்றம்

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து தடுமாறி வருகிறது. #ENGvIND
    லண்டன் : 

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சொதப்ப தொடங்கியது. விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8, புஜாரா ஒரு ரன் என பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அதிகபட்சமாக அஷ்வின் 29 ரன்களும், கோலி 23 ரன்களும் அடித்தனர். இதனால், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில், ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தில் 7-வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜென்னிங்ஸ் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே குக், இஷாந்த் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.

    அடுத்து களமிறங்கிய போப் மற்றும் ரூட் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலந்து அணி 77 ரன்கள் குவித்திருந்த நிலையில் பாண்டியா வீசிய பந்தில் போப் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.


    தொடர்ந்து, ஷமி பந்து வீச்சில் 19 ரன் அடித்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, ஆட்டத்தின் உணவு இடைவேலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்திருந்தது.

    உணவு இடைவேலைக்கு பிறகு களமிறங்கிய பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் 22 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்த அவர் ஷமி பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

    இதனால், 31 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 131 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது, பெய்ஸ்டோவ் 20 ரன்களுடனும், வோக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுக்களையும், பாண்ட்யா மற்றும் இஷாந்த் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். #ENGvIND
    Next Story
    ×