search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் இந்த முறை சிறப்பாக தயாராகியுள்ளோம்- புஜாரா சொல்கிறார்
    X

    நாங்கள் இந்த முறை சிறப்பாக தயாராகியுள்ளோம்- புஜாரா சொல்கிறார்

    2014-க்குப்பின் ஏராளமான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தின் மூலம், தற்போது சிறப்பாக தயாராகியுள்ளோம் என புஜாரா தெரிவித்துள்ளார். #ENGvIND #Pujara
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா கடந்த முறை (2014) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் படுதோல்வியடைந்து தொடரை 1-3 என இழந்தது. தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, விராட் கோலி, ரகானே, புவனேஸ்வர் குமார் ஷமி, இசாந்த் சர்மா ஆகியோர் அணியில் உள்ளனர்.



    தற்போதுள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்காக இந்த முறை சிறப்பாக தயாராகியுள்ளோம் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்திடம் தொடரை இழந்த பின்னர், ஆசியாவிற்கு வெளியில ஏராளமான ஆட்டத்தில் விளையாடியுள்ளோம். அந்த அனுபவம் எங்களுக்கு கைக்கொடுக்கும். இந்தியாவிலேயே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சில ஆடுகளங்கள் உள்ளது.

    அத்துடன் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் உள்ளது. இந்த முறை சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×