search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு, புனே இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு, புனே இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற எப்.சி. புனே சிட்டி, பெங்களூரு சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது. #HeroISL #BengaluruFC #FCPuneCity
    பெங்களூரு:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்கிய 74-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் புனே அணியின் சர்தக் கோலுயி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் புனே அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 75-வது நிமிடம் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் இன்றைய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணியினருக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

    இன்றைய போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 43 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், புனே அணி 29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #BengaluruFC #FCPuneCity
    Next Story
    ×