search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வேகப்பந்து வீச்சாளர் தாக்குதல் தொடரும் - கிப்சன்
    X

    4 வேகப்பந்து வீச்சாளர் தாக்குதல் தொடரும் - கிப்சன்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணியை தாக்க திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார். #SAvIND #Gibson


    தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன், இந்த தொடர் முழுவதும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். கிப்சன் கூறுகையில், ‘வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படக்கூடிய பயிற்சியாளர் நான். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அணியின் கலவை சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்வரும் டெஸ்ட் போட்டிக்கான சீதோஷ்ண நிலையும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அது கைகூடாவிட்டால் வேறு வழியை கையாள வேண்டும். எதுவாகிலும் இந்த தொடர் முழுவதும் எப்படி 4 வேகப்பந்து வீச்சாளர்களை களத்திற்கு கொண்டு வருவது என்பதை தான் கவனத்தில் கொள்வோம்’ என்றார். 
    Next Story
    ×