என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.சி.சி. பெண்கள் சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்22 Oct 2017 8:59 AM GMT (Updated: 22 Oct 2017 8:59 AM GMT)
ஐ.சி.சி. பெண்கள் சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. பெண்கள் சாம்பயின்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் ஹெய்ன்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வின்பீல்டு (48), டெய்லர் (34), சிவர் (36) ஆகியோரின் ஆட்டத்தில் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தாலும் அந்த அணியின் பிளாக்வெல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஹீலே 18 ரன்னும், பெர்ரி 20 ரன்னும், விலானி 38 ரன்னும், ஹெய்ன்ஸ் 30 ரன்னும் எடுத்தனர். இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 26-ந்தேதி நடக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் ஹெய்ன்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வின்பீல்டு (48), டெய்லர் (34), சிவர் (36) ஆகியோரின் ஆட்டத்தில் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தாலும் அந்த அணியின் பிளாக்வெல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஹீலே 18 ரன்னும், பெர்ரி 20 ரன்னும், விலானி 38 ரன்னும், ஹெய்ன்ஸ் 30 ரன்னும் எடுத்தனர். இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 26-ந்தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X