என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை: அசாருதீன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்20 Aug 2017 1:15 PM GMT (Updated: 20 Aug 2017 1:15 PM GMT)
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் விளைாடிய காலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ இவருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து அசாருதீன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையில் சூதாட்டத்தில் அசாருதீனுக்கு தொடர்பில்லை என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இருந்தாலும் பிசிசிஐ அசாருதீனை விலக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் தேர்தல் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதை அச்சங்கம் நிராகரித்தது.
இந்நிலையில் ‘‘மொயின்-உத்-தவ்லா கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் உள்ள வீரர்கள் இரண்டு நாட்கள் லீக்கில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
லோதா கமிட்டி பரிந்துரையின்படி தேர்வாளர்கள் குறைந்தது 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். தேர்வாளர்களை நியமிக்கும்போது இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லேதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்குதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இதை மீடியாக்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இருந்தாலும் பிசிசிஐ அசாருதீனை விலக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் தேர்தல் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதை அச்சங்கம் நிராகரித்தது.
இந்நிலையில் ‘‘மொயின்-உத்-தவ்லா கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் உள்ள வீரர்கள் இரண்டு நாட்கள் லீக்கில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
லோதா கமிட்டி பரிந்துரையின்படி தேர்வாளர்கள் குறைந்தது 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். தேர்வாளர்களை நியமிக்கும்போது இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லேதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்குதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இதை மீடியாக்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X