என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்13 April 2017 3:58 AM GMT (Updated: 13 April 2017 3:58 AM GMT)
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து நோசோமி ஒகுஹராவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர் :
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் 10-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 62 நிமிடம் தேவைப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் (இந்தியா) 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் இமில் ஹோல்ஸ்டையும் (டென்மார்க்), ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 21-11 என்ற நேர்செட்டில் கென்டா நிஷிமோடோவையும் (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர். அஜய் ஜெயராம், சமீர் வர்மா, சவுரவ் வர்மா ஆகிய இந்தியர்கள் தோல்வி கண்டு வெளியேறினர்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் 10-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 62 நிமிடம் தேவைப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் (இந்தியா) 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் இமில் ஹோல்ஸ்டையும் (டென்மார்க்), ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 21-11 என்ற நேர்செட்டில் கென்டா நிஷிமோடோவையும் (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர். அஜய் ஜெயராம், சமீர் வர்மா, சவுரவ் வர்மா ஆகிய இந்தியர்கள் தோல்வி கண்டு வெளியேறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X