என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியோதர் டிராபியில் டோனிக்கு ஓய்வு: ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் கேப்டனாக நியமனம்
Byமாலை மலர்21 March 2017 10:16 AM GMT (Updated: 21 March 2017 10:16 AM GMT)
தியோதர் டிராபியில் மகேந்திர சிங் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்த மீண்ட ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு, இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகளுக்கு இடையில் தியோதர் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகேந்திர சிங் டோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ப்ளூ அணிக்கு ரோகித் சர்மாவும், இந்தியா ரெட் அணிக்கு பார்த்தீவ் பட்டேலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக பந்து வீசிய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் அணியில் இடம்பிடித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய தேசிய அணியில் இடம்பிடிப்பார்.
விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதிப் போட்டியில் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதால், தரம்சாலா டெஸ்டில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா ப்ளூ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), மந்தீப் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்பஜன் சிங், குருணால் பாண்டியா, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, பங்கஜ் ராவ்.
இந்தியா ரெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
பார்த்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, மயங் அகர்வால், கேதர் ஜாதவ், இஷாங்க் ஜக்கி, குர்கீரத் மான், அக்சார் பட்டேல், அக்சய் கார்னீவர், அசோக் திண்டா, குல்வாந்த் கெஜ்ரோலியா, தவால் குல்கர்னி, கோவிந்த போத்தர்.
இதற்கான இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகேந்திர சிங் டோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ப்ளூ அணிக்கு ரோகித் சர்மாவும், இந்தியா ரெட் அணிக்கு பார்த்தீவ் பட்டேலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக பந்து வீசிய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் அணியில் இடம்பிடித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய தேசிய அணியில் இடம்பிடிப்பார்.
விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதிப் போட்டியில் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதால், தரம்சாலா டெஸ்டில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா ப்ளூ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), மந்தீப் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்பஜன் சிங், குருணால் பாண்டியா, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, பங்கஜ் ராவ்.
இந்தியா ரெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
பார்த்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, மயங் அகர்வால், கேதர் ஜாதவ், இஷாங்க் ஜக்கி, குர்கீரத் மான், அக்சார் பட்டேல், அக்சய் கார்னீவர், அசோக் திண்டா, குல்வாந்த் கெஜ்ரோலியா, தவால் குல்கர்னி, கோவிந்த போத்தர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X