என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் ஹசாரே தொடர் மூலம் இந்திய அணியில் திரும்ப திட்டமிட்டுள்ளார் ஷமி
Byமாலை மலர்27 Feb 2017 2:54 PM GMT (Updated: 27 Feb 2017 2:54 PM GMT)
விஜய் ஹசாரே தொடர் மூலம் உடற்தகுதியை நிரூபித்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி திட்டமிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 3-வது டெஸ்டின்போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவரது காயம் முழுவதுமாக குணமடைந்து விட்டது.
ஒரு வீரர் காயம் அடைந்து அணியில் இருந்து விலகினால் அதன்பிறகு உள்ளூர் போட்டியில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்று இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே திட்டவட்டமாக முடிவு செய்துள்ளார்.
இதனால் மொகமது ஷமி விஜய் ஹசாரா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இதுகுறித்து ஷமி கூறுகையில் ‘‘தற்போது காயத்தில் இருந்து நான் மீண்டு, வலைப் பயிற்சியை தொடங்கியுள்ளேன். நான் முழுமையான உடற்தகுதி அடைந்து, விளையாட்டுக்கு தயாராகிவிட்டேனா, என்பது குறித்து தற்போது வரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், விஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணிக்காக கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடலாம்.
ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. வெற்றி தோல்வி என்பது கிரிக்கெட்டின் ஒரு அங்கம். புனே டெஸ்ட் நமக்கு மோசமான நாள். யாரையும் குறை கூறாமல் இனிமேல் இருக்கும் போட்டி மீது கவனம் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்’’ என்றார்.
ஒரு வீரர் காயம் அடைந்து அணியில் இருந்து விலகினால் அதன்பிறகு உள்ளூர் போட்டியில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்று இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே திட்டவட்டமாக முடிவு செய்துள்ளார்.
இதனால் மொகமது ஷமி விஜய் ஹசாரா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இதுகுறித்து ஷமி கூறுகையில் ‘‘தற்போது காயத்தில் இருந்து நான் மீண்டு, வலைப் பயிற்சியை தொடங்கியுள்ளேன். நான் முழுமையான உடற்தகுதி அடைந்து, விளையாட்டுக்கு தயாராகிவிட்டேனா, என்பது குறித்து தற்போது வரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், விஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணிக்காக கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடலாம்.
ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. வெற்றி தோல்வி என்பது கிரிக்கெட்டின் ஒரு அங்கம். புனே டெஸ்ட் நமக்கு மோசமான நாள். யாரையும் குறை கூறாமல் இனிமேல் இருக்கும் போட்டி மீது கவனம் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X