என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேச டெஸ்ட் தொடரில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
Byமாலை மலர்25 Feb 2017 12:51 PM GMT (Updated: 25 Feb 2017 12:51 PM GMT)
தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்காள தேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச கிரிக்கெட் அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் நடைபெறுகிறது. மார்ச் 7-ந்தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இலங்கை அணி வருகிற செவ்வாய்க்கிழமை (28-ந்தேதி) அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்காள தேச தொடரில் மேத்யூஸ் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் காரணமாக அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டார். தற்போது காயம் குணமடையாததால் வங்காள தேச அணிக்கெதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதத்தில் மேத்யூஸ் 2-வது டெஸ்ட் தொடரை இழக்கிறார்.
இதனால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹெராத் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெறுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்காள தேச தொடரில் மேத்யூஸ் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் காரணமாக அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டார். தற்போது காயம் குணமடையாததால் வங்காள தேச அணிக்கெதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதத்தில் மேத்யூஸ் 2-வது டெஸ்ட் தொடரை இழக்கிறார்.
இதனால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹெராத் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெறுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X