என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். அட்டவணை அறிவிப்பு: முதல் ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதல்
Byமாலை மலர்16 Feb 2017 4:27 AM GMT (Updated: 16 Feb 2017 4:27 AM GMT)
ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
மும்பை :
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. ஏப்.6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டி நடைபெறும் 10 நகரங்களில் ஒன்றாக இந்தூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தூரில் முதல்முறையாக சில ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் நடப்பு சாம்பியனுக்குரிய ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.
பங்கேற்கும் 8 அணிகள் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. ஏப்.6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டி நடைபெறும் 10 நகரங்களில் ஒன்றாக இந்தூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தூரில் முதல்முறையாக சில ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் நடப்பு சாம்பியனுக்குரிய ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.
பங்கேற்கும் 8 அணிகள் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X