என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 8-வது வெற்றி
Byமாலை மலர்9 Feb 2017 3:26 AM GMT (Updated: 9 Feb 2017 3:26 AM GMT)
இந்தியாவில் நடந்து வரும் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
விஜயவாடா :
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் விஜயவாடாவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, நேபாளத்தை சந்தித்தது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. அஜய்குமார் 109 ரன்னும், துர்காராவ் 53 ரன்னும், வெங்கடேஸ்வரராவ் ஆட்டம் இழக்காமல் 82 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் விஜயவாடாவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, நேபாளத்தை சந்தித்தது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. அஜய்குமார் 109 ரன்னும், துர்காராவ் 53 ரன்னும், வெங்கடேஸ்வரராவ் ஆட்டம் இழக்காமல் 82 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X