என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவிற்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
Byமாலை மலர்22 Jan 2017 12:00 PM GMT (Updated: 22 Jan 2017 12:00 PM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் தவான் நீக்கப்பட்டு ரகானே சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ், ஜோ ரூட் நீக்கப்பட்டு பில்லிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். ராய் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.
அரைசதம் அடித்த ராய்
3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மோர்கன் 43 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பட்லரை 11 ரன்னில் வெளியேற்றினார் பாண்டியா.
3 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா
மிடில் ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை பாண்டியா வீழ்த்தியதால் இங்கிலாந்து 43 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 300 ரன்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படித்தி விடலாம் என்று இந்திய வீரர்கள் நினைத்தார்கள்.
ஆனால் 7-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்த பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
56 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோவ்
கிறிஸ் வோக்ஸ் 19 பந்தில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 39 பந்தில் 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி கடைசி 39 பந்தில் 71 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 10 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவரில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்க உள்ளது.
இந்திய அணியில் தவான் நீக்கப்பட்டு ரகானே சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ், ஜோ ரூட் நீக்கப்பட்டு பில்லிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். ராய் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.
அரைசதம் அடித்த ராய்
3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மோர்கன் 43 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பட்லரை 11 ரன்னில் வெளியேற்றினார் பாண்டியா.
3 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா
மிடில் ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை பாண்டியா வீழ்த்தியதால் இங்கிலாந்து 43 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 300 ரன்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படித்தி விடலாம் என்று இந்திய வீரர்கள் நினைத்தார்கள்.
ஆனால் 7-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்த பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
56 ரன்கள் சேர்த்த பேர்ஸ்டோவ்
கிறிஸ் வோக்ஸ் 19 பந்தில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 39 பந்தில் 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி கடைசி 39 பந்தில் 71 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 10 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவரில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்க உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X