என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரானி கோப்பை கிரிக்கெட்: சிராக் காந்தி சதத்தால் சரிவில் இருந்து மீண்டது குஜராத்
Byமாலை மலர்21 Jan 2017 3:37 AM GMT (Updated: 21 Jan 2017 3:37 AM GMT)
மும்பையில் நேற்று தொடங்கிய இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் (5 நாள் ஆட்டம்) சிராக் காந்தி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
மும்பை :
ரஞ்சி சாம்பியன் குஜராத்-புஜாரா தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (5 நாள் ஆட்டம்) மும்பையில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணி கேப்டன் பார்த்தீவ் பட்டேல் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி முதலில் ஆடிய குஜராத் அணி 82 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சிராக் காந்தி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்துள்ளது. ‘கன்னி’ சதம் கண்ட சிராக் காந்தி 159 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 136 ரன்னும், ஹர்திக் பட்டேல் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தரப்பில் சித்தார்த் கவுல் 4 விக்கெட்டும், பங்கஜ்சிங் 3 விக்கெட்டும் சாய்த்தார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
ரஞ்சி சாம்பியன் குஜராத்-புஜாரா தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (5 நாள் ஆட்டம்) மும்பையில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணி கேப்டன் பார்த்தீவ் பட்டேல் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி முதலில் ஆடிய குஜராத் அணி 82 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சிராக் காந்தி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்துள்ளது. ‘கன்னி’ சதம் கண்ட சிராக் காந்தி 159 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 136 ரன்னும், ஹர்திக் பட்டேல் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தரப்பில் சித்தார்த் கவுல் 4 விக்கெட்டும், பங்கஜ்சிங் 3 விக்கெட்டும் சாய்த்தார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X