என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டனாக டோனியின் கடைசி போட்டி: வாழ்த்து கோஷம் எழுப்பிய ரசிகர்கள்
Byமாலை மலர்10 Jan 2017 2:30 PM GMT (Updated: 10 Jan 2017 2:30 PM GMT)
கேப்டனாக டோனி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் பயிற்சி ஆட்டத்தை காண திரளான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் டோனி! டோனி! வாழ்த்தி கரகோஷம் எழுப்பினார்கள்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக இடம்பிடித்துள்ளார்.
இன்று மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார். ‘இந்த போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி. இதற்குப்பின் சீனியர் அணி தொடர்பானவற்றில் கேப்டனாக இருக்கமாட்டேன். ஐ.பி.எல். அணிக்கு கேப்டனாக இருப்பேன். ஜார்க்கண்ட் அணிக்கும் கேப்டனாக இருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.
பொதுவாக பயிற்சி ஆட்டத்தைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வரமாட்டார்கள். ஆனால் கேப்டனாக டோனியின் கடைசி போட்டி என்பதால் அதிக அளவில் ரசிகர்கள் இன்று மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் டோனி! டோனி! என்று உற்சாக குரல் எழுப்பி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இன்று மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார். ‘இந்த போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி. இதற்குப்பின் சீனியர் அணி தொடர்பானவற்றில் கேப்டனாக இருக்கமாட்டேன். ஐ.பி.எல். அணிக்கு கேப்டனாக இருப்பேன். ஜார்க்கண்ட் அணிக்கும் கேப்டனாக இருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.
பொதுவாக பயிற்சி ஆட்டத்தைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வரமாட்டார்கள். ஆனால் கேப்டனாக டோனியின் கடைசி போட்டி என்பதால் அதிக அளவில் ரசிகர்கள் இன்று மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் டோனி! டோனி! என்று உற்சாக குரல் எழுப்பி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X